பிளஸ் 2 தேர்வினை 8,60,434 மாணவர்கள் எழுதினர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 1% குறைந்துள்ளது. வழக்கம் போலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-டூ தேர்வில் 97% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டம் 96.3%, திருப்பூர் மாவட்டம் 96.1% தேர்ச்சி பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 238 அரசுப் பள்ளிகள் ஆகும்.
தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இயற்பியல் பாடத்தில் 96.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொழிப்பாடத்தில் 96. 85% மாணவர்களும், ஆங்கிலத்தில் 96.97% மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 95% மாணவர்களும், உயிரியல் பாடத்தில் 96.3% மாணவர்களும், கணித பாடத்தில் 96.1% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாவரவியல் பாடத்தில் 93.9% மாணவர்களும், விலங்கியலில் 91.9% மாணவர்கள், கணினி அறிவியலில் 96.1% மாணவர்கள், வணிகவியலில் 90.3% மாணவர்கள், கணக்குபதிவியலில் 91% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் புள்ளியியல்- 98.31%, புவியியல்- 99.21%, நுண் உயிரியல்-98.96%, உயிர் வேதியியல்-98.53%, நர்சிங்-97.86%, நியூட்ரிசியன் மற்றும் டையடிக்ஸ்-99.87%, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ்-98.09%, ஹோம் சயின்ஸ் - 99.78%, இந்திய கலாசாரம் - 96.08%, அட்வான்ஸ்ட் மொழிப்பாடம்-91.89%, வணிக கணிதம்-95.99% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteHow much in economics
ReplyDelete