சமீபத்தில் அவை ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே அலகாக மாற்றப்பட்டது. அனைத்து வகை பள்ளிகளையும் வட்டார அளவில் வட்டார கல்வி அலுவலர்(பி.இ.ஓ.,) குறிப்பிட்ட வட்டாரங்களைச் சேர்த்து மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் கண்காணிக்க உள்ளனர்.உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களே வட்டார கல்வி அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையிலான அவர்கள் தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கின்றனர்.
புதிய உத்தரவுப்படி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ.,-ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளையும் கண்காணிக்க வேண்டும். அதன் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலரை விட பதவியில் உயர்ந்தவர் என்பதால், அப்பள்ளிகளை ஆய்வு செய்ய முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.மேலும் மாவட்டக் கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் பள்ளிகள் எண்ணிக்கை 500 யை யொட்டி இருக்க வேண்டும். வட்டாரத்தையும் உடைக்க கூடாது என, தெரிவிக்கப்பட்டது.
இதனால் 3 முதல் 5 வட்டாரங்களை இணைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்படுகிறது. சில வட்டாரங்களில் பள்ளிகள் குறைவாகவும், சில இடங்களில் அதிகமாக உள்ளதால், 500 என்ற எண்ணிக்கை அடிப்படையில் பிரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களே வட்டார கல்வி அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையிலான அவர்கள் தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கின்றனர்.
வட்டடார கல்வி அலுவலர் BEO தொடக்க மற்றும் நடுப்பள்ளிகள் ,இந்நிலையில் உள்ள தனியார் பள்ளிகளை மட்டுமே பார்வையிட முடியும்.GO 101
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteவட்டார கல்வி அலுவலர்களாக AEEO'S நியமிக்கப்பட்டால் உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு செய்வதை ஏற்றுகொள்ள முடியாது. ஆகவே BEO பதவியை உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு வழங்குவதே சிறப்பு ஆகும்
ReplyDeleteUyarnilai thalamai aasiriyar thaguthil ullavar mel nilai palliyai aaivu seivathai etru kolla mudiyuma sir
Delete50% பதவி உயர்வு,50% நேரடி நியமனம் என்ற வகையில் BEO பதவிக்கு போட்டித்தேர்வு வர வாய்ப்புள்ளதா????
ReplyDeleteSir Which major r you
DeleteSir which major r you sir
DeleteMathematics sir.நீங்க என்ன. Subject
Deleteஒரு உயர்நிலைப்பள்ளி த.ஆ. மேல்நிலைப்பள்ளி த.ஆ. ஆக மற்றும் DEO ஆக செல்ல தகுதி உடையவர். ஆகவே உயர்நிலைப்பள்ளி த.ஆ.மேல்நிலைப்பள்ளியில் 6,7,8 வகுப்புகளை ஆய்வு செய்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு AEEO (ப.ஆ. நிலை) உயர்நிலைப்பள்ளி த.ஆ ஆக வந்த பின்புதான் மேல்நிலைப்பள்ளி த.ஆ. ஆக அல்லது DEO ஆக செல்ல தகுதி உடையவர்.
ReplyDeleteஆகவே ஒரு உயர்நிலைப்பள்ளி த.ஆ. மேல்நிலைப் பள்ளியில் உள்ள 6,7,8 வகுப்புகளை ஆய்வு செய்வதில் தவறில்லை sir. தற்போது DEO தான் 6,7,8,9,10 வகுப்புகளை ஆய்வு செயது வருகிறார்கள்.
தொடக்க நடுநிலைப் பள்ளிகள் BEO கட்டுப்பாட்டிலும் உயர்நிலைப் பள்ளிகள் DEO கட்டுப்பாட்டிலும் மேல்நிலைப்பள்ளிகள் CEO கட்டுப்பாட்டிலும் வரும்
ReplyDelete