மாணவர்கள் பழைய பாசில் பயணிக்கலாம்: அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2018

மாணவர்கள் பழைய பாசில் பயணிக்கலாம்: அமைச்சர்

புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாசைக் காட்டி, மாணவர்கள், இலவசமாக பயணிக்கலாம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பெத்திக்குப்பத்தில், 125 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடிஅமைக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த அமைச்சர், பள்ளிகள் திறந்தபின்னர் மாணவர்கள் தடையின்றி அரசு பஸ்களில் பயணிக்கலாம். புதிய பாஸ்கள் வழங்கப்படும் வரை பழைய பாஸ்களை காட்டி பயணிக்கலாம், என்றார்.

இந்த சோதனைச்சாவடி குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்த சோதனைச்சாவடியில், போக்குவரத்து, காவல், வருவாய், வணிகவரி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மதுவிலக்கு உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும். இதனால், சட்ட விரோத பொருட்கள் கடத்தல், முறைகேடான வாகன இயக்கம், வரி ஏய்ப்பு, வனப்பொருட்கள், வன விலங்குகள் கடத்தல் தடுக்கப்படும், என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி