வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக களமிறங்கிய பதஞ்சலியின் கிம்போ மெசேஜிங் ஆப் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2018

வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக களமிறங்கிய பதஞ்சலியின் கிம்போ மெசேஜிங் ஆப்


பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் சார்பில், கிம்போ என்கிற மெசேஜிங் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இது வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி என்கிற நிறுவனத்தை 2006ம் ஆண்டு துவக்கினார். இந்த நிறுவனம் FMCG பொருட்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது. ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது.

சமீபத்தில் இந்த நிறுவனம் பி எஸ் என் எல் நிறுவனத்துடன் இணைந்து 'சுதேசி சம்ரிதி' என்கிற பெயரில் சிம் கார்டை அறிமுகப்படுத்தியது. விரைவில் இந்த சிம் கார்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 144 மாதக் கட்டணத்தில் அன்லிமிட்டெட் கால்கள் மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் சார்பில் கிம்போ என்கிற மெசேஜிங் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இது வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக இருக்கும் என்று பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்கே திஜாராவாலா தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. "This is a security disaster" as per a French hacker who claims he can download all the messages.

    ReplyDelete

  2. Elliot Alderson
    @fs0c131y
    This @KimbhoApp is a joke, next time before making press statements, hire competent developers... If it is not clear, for the moment don't install this app. #Kimbho #KimbhoApp

    1:35 AM - May 31, 2018
    --- From Economic times dated today

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி