நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கு 2018}19}ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6}ஆம்தேதி நடைபெற்றது.நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் விண்ணப்பித்திருந்த 13.26 லட்சம் மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன்5}ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் திருத்தம் குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய பிறந்த தேதி, இடஒதுக்கீட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளி நிலை போன்ற விண்ணப்பத் தகவல்களில் திருத்தம் இருந்தால் அதனை மேற்கொள்ளலாம்.
மே 15}ஆம் தேதி முதல் மே 18}ஆம் தேதி மாலை 5 மணி வரை திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாம்.தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர் எந்த திருத்தமும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Educational News
ReplyDeleteVisit
kaninikkalvi.blogspot.in
Add Your Whatsapp Group: 8807414648