நடப்பாண்டில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க ரூ.20.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தை நல ஒப்புயர்வு மையம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
காஞ்சி, நீலகிரி, நாகை மாவட்ட செவிலியர் பயிற்சி பள்ளிகளில் மாணவியர் விடுதி கட்டப்படும். 985 துணை சுகாதார மையங்கள் ஒருங்கிணைந்த சுகாதாரம், நலவாழ்வு மையமாக உயர்த்தப்படும். மேலும் மதுரை, கோவை, நெல்லை, சேலம் உள்ளிட்ட மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.22 கோடியில் சி.டி.ஸ்டிமுலேட்டர் கருவிகள் வழங்கப்படும் என முதல்வர் பேரவையில் அறிவித்தார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.60 கோடி மதிப்பில் யோகா, இயற்கை மருத்துவ மையம் அமைக்கப்படும். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.42.84 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
CM sir Eppadiyavathu
ReplyDeleteTET kku posting
announce pannirunga sir
Teachers munnadi
nenga nichchayama samiya theriyuvinga
பல ஆண்டுகளாக கணினி பயிற்றுநராக பணிபுரிந்து, சிறந்த முறையில் பணியாற்றியும், பணிப்பதிவேட்டில் உயா்கல்விக்கு ஊக்க ஊதிய உயா்வு பெற்றும், அனுபவமிக்க, ஆற்றல் நிறைந்த, சிந்தனை நிறைந்த பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி பயிற்றுநா்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிடுமாறு முதலமைச்சா் அய்யா அவா்களுக்கு பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDelete