கல்வி நிறுவன கட்டடங்களுக்கு நகரமைப்பு ஒப்புதல்: விண்ணப்பிக்க ஜூலை 13 கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2018

கல்வி நிறுவன கட்டடங்களுக்கு நகரமைப்பு ஒப்புதல்: விண்ணப்பிக்க ஜூலை 13 கடைசி நாள்

கல்வி நிறுவன கட்டடங்களுக்கு நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் ஒப்புதலை பெற, ஜூலை 13 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து,தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


கடந்த 2011 -ஆம் ஆண்டு ஜனவரி 1 -ஆம் தேதிக்கு முன்பாக செயல்பட்டு வரும் கல்வி நிறுவன கட்டடங்கள், நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் ஒப்புதல் பெறுவது அவசியமாகும். இதற்காக ஒருமுறை கட்டணம், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், விதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கு தமிழக அரசின் இணையதளமான www.tn.gov.in/tcpமூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க ஜூலை 13 -ஆம் தேதி கடைசி நாளாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி