ஜூன் 30க்குள் ஆதார் - பான் எண் இணைக்காவிட்டால், வருமானவரி தாக்கல் செய்ய முடியாது?: மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2018

ஜூன் 30க்குள் ஆதார் - பான் எண் இணைக்காவிட்டால், வருமானவரி தாக்கல் செய்ய முடியாது?: மத்திய அரசு

ஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட அவகாசமான ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஆதார் - பான் எண்களை இணைக்காவிட்டால், வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

வருமானவரிச் சட்டப்பிரிவு 139 AA உட்பிரிவு இரண்டின் படி, ஜூலை 1, 2017 அன்று பான் வைத்திருப்பவர்கள்,  ஆதார் எண்களை வரித்துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவது கட்டாயமாகும்.

வருமானவரிக் கணக்குத் தாக்கலுக்காக பான் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கூறிய மத்திய அரசு அதற்கான அவகாசத்தை ஏற்கெனவே 4 முறை  நீட்டித்தது. ஜூன் 30-ஆம் தேதி அன்று அவகாசம் முடியும் நிலையில், அதற்குள் ஆதார் - பான் எண்களை இணைக்காவிட்டால், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

1 comment:

  1. ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய காலம் ஆவதால் இன்னும் நீடிக்கலாம். .... ஆதார் அட்டையில் உள்ள குளறுபடிகள் நாம் அறிந்ததே. ....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி