கல்விக் கட்டண விவரங்களை ஆன்லைனில் உடனடியாக பதிவேற்ற வேண்டும்: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2018

கல்விக் கட்டண விவரங்களை ஆன்லைனில் உடனடியாக பதிவேற்ற வேண்டும்: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்படாத தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயத்துக்கு தேவையான விவரங்களை உடனடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கல்விக்கட்டண நிர்ணயக்குழு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டதனியார் சுயநிதி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 6,500 பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய சுமார் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கு (2018-19) இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த நிலையில், கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு தேவையான விவரங்களை உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு தனியார் கல்விக்கட்டண நிர்ணயக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த குழுவின் தனி அலுவலர், முதன்மை கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், தொடக்கக் கல்வி அதிகாரிகள், உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள்ஆகியோருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி