கூடுதலாக வசூலிக்கும் இன்ஜி., கல்லூரிகள் : நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2018

கூடுதலாக வசூலிக்கும் இன்ஜி., கல்லூரிகள் : நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை

'பள்ளிகளை போல், கல்லுாரிகளின் கட்டண விபரங்களை, இணைய தளத்தில் வெளியிட வேண்டும்; அதிகமாக வசூலிக்கும் கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உயர் கல்வித் துறைக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளின் கல்வி கட்டணத்தை, தமிழக அரசின் கல்வி கட்டண கமிட்டி நிர்ணயித்துள்ளது. கட்டண விபரங்களை, அந்தந்த பள்ளி களின் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிக கட்டணம் வசூல்அதுபோல, இன்ஜினி யரிங் சுயநிதி கல்லுாரிகளின் கட்டணத்தை நிர்ண யிக்கும் பணியை, உயர்கல்வி கட்டண நிர்ணய கமிட்டி மேற்கொள்கிறது. ஆனால், இந்த கமிட்டி, எந்தெந்த கல்லுாரிக்கு எவ்வளவு கட்டணம் நிர்ண யித்துள்ளது, அதற்கான உத்தரவுகள் என்ன என்ற விபரம், மாணவர்களுக்கோ, பெற்றோருக்கோ தெரிவது இல்லை.இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஏமாற்றி, பல கல்லுாரிகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங் வழியாக, அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெறும் மாணவர்களிடம், எவ்வளவு கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என, இன்ஜி., கவுன்சிலிங் குழு, குறிப்புகளை வழங்குகிறது.ஆனால், பெரும்பாலான கல்லுாரிகள், கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றன. சில கல்லுாரிகள், மாணவர்களிடம் வசூலிக்கும் வைப்பு தொகையை, மாணவர்கள் படித்து முடிக்கும் போது, திருப்பிவழங்குவதில்லை எனவும், புகார்கள் எழுந்துள்ளன.புகார்மேலும், பொருளாதார சூழல், குடும்ப பிரச்னை, தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக, படிப்பை சிலர் பாதியில் கைவிடுகின்றனர். சிலர் வேறு கல்லுாரிகளுக்கு மாறுகின்றனர். இவர்களிடம், முழுமை யாக, நான்கு ஆண்டுகளுக்கான கட்டணத்தை கட்டாய மாக வசூலிப்பதாகவும், கட்டணத்தை செலுத்தும் வரை, தற்காலிக சான்றிதழை நிறுத்தி வைப்பதாகவும், புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது:கவுன்சிலிங் வழியே, இன்ஜி., கல்லுாரிகளில்மாணவர்களை சேர்க்கும், உயர் கல்வித்துறை, தனியார் கல்லுாரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். மாணவர்களிடம் அத்துமீறி வசூலிக்கும் கல்லுாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க ேண்டும்.கட்டண பிரச்னையால் பல மாணவர்கள், உரிய நேரத்தில் தேர்வை எழுத முடியாமல், நிறுத்தி வைக்கப்படுகின்றனர். பல மாணவர்கள், தங்களின் மாற்று சான்றிதழ்களை கூட பெற முடியாமல் தவிக்கின்றனர்.எனவே, கட்டண பிரச்னைக்கு, தமிழக உயர் கல்வித்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி