தனியார் பள்ளி மாணவர் சேர்க்கையை ஓவர்டேக் செய்த அரசுப் பள்ளிகள்!! எங்கு தெரியுமா ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2018

தனியார் பள்ளி மாணவர் சேர்க்கையை ஓவர்டேக் செய்த அரசுப் பள்ளிகள்!! எங்கு தெரியுமா ?

கேரள அரசின் கல்வித்துறை தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளால் தனியார் பள்ளிகளின்மாணவர் சேர்க்கையைவிட அரசுப் பள்ளிகளில் அதிக அளவு மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு அரசு பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில்அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து655 ஆக அதிகரித்துள்ளது.அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை 8 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.அரசுப்பள்ளிகளில் 71ஆயிரத்து 257 மாணவ, மாணவியரும் (6.3 சதவீதம்), அரசுஉதவி பெறும் பள்ளிகளில் 1லட்சத்து 13ஆயிரத்து 398 (5.3 சதவீதம்) பேரும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட 33,052 குறைந்துள்ளது (8 சதவீதம்).நிலச்சரிவு காரணமாக சில பகுதிகளில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டன.அங்கிருந்து விவரங்கள் கிடைக்கிற போது இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என தெரிகிறது.

பொதுப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் மட்டும் 10 ஆயிரத்து 83 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.மிகவும் அதிக பட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 4978 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.25 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் பொதுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை முதன்முறையாகஅதிகரிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. தமிழகத்திலும் அரசு வேலை வாய்ப்பில் அரசுப் பள்ளிகளில் படித்தோர்க்கு 50% முன்னுரிமை வழங்க வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி