அப்துல்கலாம் விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விஞ்ஞான
வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 'அப்துல் கலாம் விருது' வழங்கப்படுகிறது
இவ்விருது, சுதந்திர தின விழாவில், முதல்வரால் வழங்கப்படும். விருது பெறுபவருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் காசோலை, எட்டு கிராம் தங்கப் பதக்கம், பாராட்டு சான்றிதழ் தரப்படும்.
விருது பெற விரும்புவோர், சுயவிபரக் குறிப்பு மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், 'அரசு முதன்மை செயலர், உயர் கல்வித்துறை, தலைமை செயலகம், சென்னை - 600009' என்ற முகவரிக்கு ஜூலை, 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.'
விருது பெற தகுதியான நபரை, தமிழக அரசு நியமித்துள்ள தேர்வுக் குழு முடிவு செய்யும்' என, உயர் கல்வித்துறை முதன்மை செயலர், சுனீல் பாலீவால் அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி