NEW KV Schools - 'தமிழகத்தில் மேலும் 11 கே.வி., பள்ளிகள்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2018

NEW KV Schools - 'தமிழகத்தில் மேலும் 11 கே.வி., பள்ளிகள்'

'தமிழகத்தில் மேலும், 11 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்குவது பரிசீலனையில் உள்ளது,'' என கேந்திரிய வித்யாலயா சங்கதன், சென்னை மண்டல துணை கமிஷனர் மணி தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: சென்னை மண்டலத்தில், புதுச்சேரி உட்பட, 50, கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. தற்போது, வெளியான பிளஸ் 2 தேர்வில், ஐ.சி.எஸ்.இ., - என்.சி.இ.ஆர்.டி., பாடப்பிரிவு பள்ளி களை விட கே.வி., பள்ளிகள் அதிகபட்சம், 97.78 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளன. தற்போது, 'டர்ணோத்ஷவா' என்ற திட்டம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பிளஸ் 1 செல்லும் முன் மொழி, விளையாட்டு, யோகா, கவுன்சிலிங், சேவை உள்ளிட்ட திறன் பயிற்சிகள் அளிக்கப்படும்.மதுரைஉட்பட சில இடங்களில், 11 கே.வி., பள்ளிகள் துவங்க, பரிசீலிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

3 comments:

  1. 🔥🔥🔥🔥🔥🔥🔥
    விளக்க அறிவிப்பு :
    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களது கூட்டமைப்பானது இதுவரை பலகட்ட போராட்டங்களையும், பல்வேறு தலைவர்களையும் சந்தித்து 2013 TET என்பதை உயிர்பெற செய்துள்ளோம். மேலும் பலகட்ட போராட்டங்களை நடத்தினாலும்அதுகவன ஈர்ப்பு போராட்டமாக மட்டுமே செய்துள்ளோம். ஆளும் அரசுக்குஎதிராக களம்கண்டதில்லை.

    வெயிட்டேஜ் முறை:
    எம் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் முதல் உறுப்பினர் வரை வெயிட்டேஜால் பாதிக்கபட்டவர்கள் உண்டு. வெயிட்டேஜால் பலன் பெறுபவர்களும் உண்டு. எனவே எம் அமைப்பு இதுவரை வெயிட்டேஜிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ குரல் கொடுத்ததில்லை. கொடுக்கவும் கொடுக்காது. மேலும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் எம் கூட்டமைப்பில் சம பலத்தில், நிர்வாகிகளாகவும் உள்ளனர். எனவே எங்களிடையே 90+ & 90- என்ற வேறுபாடு கிடையாது.

    முதலில் தேர்ச்சி பெற்றோருக்கு முதலில் பணி ( முன்னுரிமை)

    வெயிட்டேஜ் தொடர்ந்தாலும் சரி, வெயிட்டேஜை மாற்றி அமைத்தாலும் சரி , எந்த முறையை பின்பற்றினாலும் தற்போது தேர்ச்சி அடைந்தவர்களுக்கே வாய்ப்பு ! 2013 க்கு மிகப்பெரிய கேள்வி குறியே? எனவே எங்களது ஒற்றை கோரிக்கை பாதிக்கபட்ட
    2013 ல் தேர்ச்சி பெற்றோருக்கு முன்னுரிமை அளித்து பணி வழங்கவேண்டும் என்பது மட்டுமே!

    அனைவருக்கும் தீர்வு:
    ஆசிரியர் தகுதிதேர்வை பொருத்த மட்டில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் யாராலும் சரியான தீர்வை தர இயலாது என்பதே உண்மையிலும் உண்மை. எந்த முறையானாலும் ஒருசாராருக்கு பாதிப்பே!

    இறுதிநிலை"தொகுப்பூதியம்"
    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் தற்போது பாதிக்கபடவில்லை. தேர்ச்சிபெற்று பாதிக்கபட்டோர் பெறும்பான்மையானோர் Group 4, Group 2, இடைநிலை ஆசிரியர் மற்றும் தனியார் பள்ளிகளில் 20,000 க்கும் அதிகமாக ஊதியம் பெற்று வருகின்றனர். எந்த வேலையும் இல்லாமல் அடிப்படைவாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்கள் சிலரே!
    " பள்ளிகளில் காலி பணியிடம் குறைவு" "அரசின் நிதிபற்றாக்குறை " இதை கவனத்தில் கொண்டு 10,000 மாத சம்பளத்தில் அரசுபள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய விருப்பம் தெரிவித்தவர்களை மட்டுமே இணைத்து எம் கூட்டமைப்பின் சார்பாக வருகிற 25/06/2018 அன்று சென்னையில் போராட்டம் நடத்த உள்ளோம்.

    குறிப்பு:
    தொகுப்பூதிய நியமனம் குறித்து இரண்டுகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மேலும் தொகுப்பூதிய நியமன முறைக்கு தேர்வர் பெற்ற வெயிட்டேஜோ அல்லது அவர் பெற்ற மதிப்பெண்ணோ கணக்கில் கொள்ளபடாது. 82 ஆயினும் 102 ஆயினும் பாதிக்கபட்டோர் என்ற ஒரே நிலைதான்.
    25:06:2018 அன்றையதினம் சென்னையில் களம் காணும் பாதிக்கபட்ட ஆசிரியர்களிடம் தனியே தொகுப்பூதிய ஒப்புதல் கடிதம் பெற்று அரசிடம் சமர்பிக்கப்படும்.

    போராட்ட நாள்
    25/06/2018
    சென்னை

    💥💥💥💥💥💥💥💥💥💥
    இவண்
    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

    இளங்கோவன்
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    8778229465


    வடிவேல்சுந்தர்
    மாநில தலைவர்
    8012776142

    சிவக்குமார்
    மாநில செயலாளர்
    ( ஊடகபிரிவு)
    9626580103

    உறுதியாக பங்கேற்பவர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்.
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    ReplyDelete
  2. கும்பகோணத்தில் ஒரு kvschool
    தேவைபடுகிறது

    ReplyDelete
  3. மிக பின் தங்கிய கிராம புரத்தில் கே.வி.பள்ளி, நவோதயா மற்றும் மற்ற மத்திய அரசு பள்ளிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதனால் ஆசிரியரின் வேலைவாய்பு பெருகும். கிராம மாணவர்களின் கல்வித்தரம் உயரும். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் படிக்க வேண்டும். இப்போது அனைத்து பிரைமரி பள்ளி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் இந்தி பாடம் இருக்கின்றன.
    இதை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் ஏற்க வேண்டும். பின் காலத்தில் அனைத்து மத்திய அரசு வேலைவாயப்பு தேர்வுகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கொண்டு வரும்போது. நீட் தேர்வு போல பின் காலத்தில் மாநில அரசு கை விரித்துவிடலாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி