பி.ஆர்க்., படிக்க 1,874 பேர் ஆர்வம - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2018

பி.ஆர்க்., படிக்க 1,874 பேர் ஆர்வம

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிக்க, 1,874 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.அண்ணா பல்கலையின் இணைப்பில், 50க்கும் மேற்பட்ட, 'ஆர்கிடெக்ட்' எனும், கட்டட வடிவமைப்பியல் கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில், அரசு ஒதுக்கீட்டில், 2,200 இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலையில் ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்புவோர், 'நாட்டா' என்ற, தேசிய ஆர்கிடெக்சர் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு, நாட்டா தேர்வின் தேர்ச்சிக்கு, குறைந்தபட்சமாக, 70 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஜூலை, 4ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. மொத்தம், 2,200 இடங்களுக்கு, 1,874 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டு, 1,719 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி