இலவச, 'நீட்' பயிற்சி ஒரு வாரத்தில் துவக்கம் :பாடம் நடத்த 300 ஆசிரியர்கள் தயார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2018

இலவச, 'நீட்' பயிற்சி ஒரு வாரத்தில் துவக்கம் :பாடம் நடத்த 300 ஆசிரியர்கள் தயார்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, ஒரு வாரத்தில், 'நீட்' தேர்வு பயிற்சி துவங்க உள்ளது. பயிற்சி அளிக்க, 300 அரசு பள்ளி ஆசிரியர்கள் தயாராக உள்ளனர்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில்சேர, நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தனியார் நிறுவனங்கள் பல, நீட் தேர்வுக்கான பயிற்சி தருகின்றன. ஆனால், அதற்கு லட்சம் ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ - மாணவியருக்கு, அரசின் சார்பில், நீட் நுழைவு தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியை, தமிழக அரசு, 2017ல் அறிமுகம் செய்தது. அப்போது, ஏற்கனவே நடந்த, நீட் தேர்வுகளின் வினா வங்கி மற்றும் முக்கிய கேள்வி - பதில்கள் அடங்கிய புத்தகம்,மாணவர்களுக்கு இலவசமாக தரப்பட்டது. பள்ளிகளில், தினமும், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையிலும், வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்பாகவும், இந்த பயிற்சி வழங்கப்பட்டது. பொதுத்தேர்வு முடிந்த பின், பல்வேறு கல்லுாரி வளாகங்களில், உணவு, விடுதி வசதியுடன், அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சியும் தரப்பட்டது. அதேபோல, இந்த ஆண்டுக்கான, தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி, இன்னும் ஒரு வாரத்தில் துவங்க உள்ளது.

இதற்காக, பிளஸ் 2 பாடம் நடத்தும் திறமைமிக்க, 320 ஆசிரியர்கள், பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று, பயிற்சி பெற்றுள்ளனர்.இவர்கள், மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்க உள்ளனர். மேலும், 2017 - 18ல் நடந்த, நீட் தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள் இணைந்த, வினா வங்கி கையேடும் தயாராக உள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி