வருமானவரி கணக்கை ஆதார் இல்லாமல் தாக்கல் செய்யலாம்: சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2018

வருமானவரி கணக்கை ஆதார் இல்லாமல் தாக்கல் செய்யலாம்: சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

2018-19 ஆண்டுக்கான வருமானவரி கணக்கை ஆதார் இல்லாமல் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் என்ற வருமான வரித்துறையின் அறிவிப்பை எதிர்த்து நித்யானந்த் ஜெயராமன், நாகலைலா உட்பட ஒன்பது பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பான்கார்டுடன் ஆதார் எண் இணைப்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதால், ஆதார் எண் இல்லாமல் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கோரி இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆதார் அட்டையின் அரசியல் சாசனம் செல்லுபடியாகும் வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டினர். அந்த வழக்கில் அரசியல் சாசனம் செல்லுபடியாகும் என்று உறுதி செய்யப்பட்டால் அதன் பின் ஆதார் எண்ணை குறிப்பிட்டு திருத்தப்பட்ட வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி