வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்டக் கலந்தாய்வு இன்று தொடக்கம்:வகுப்புகள் தொடக்கம் தாமதமாகும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2018

வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்டக் கலந்தாய்வு இன்று தொடக்கம்:வகுப்புகள் தொடக்கம் தாமதமாகும்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளுக்கு 2018-19-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன.முதல் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 9-ஆம் தேதி முதல்11ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் உள்ள 3,422 இடங்களுக்காக 5,337 பேர் பங்கேற்றுத் தங்களுக்கான முதல் 3 விருப்பப் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்த நிலையில், முதல் 2,593 இடங்களில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.இதையடுத்து நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் 1,334பேர் மட்டுமே பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்தனர். இதனால் கலந்தாய்வில் பங்கேற்காதவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களை அந்த இடங்களுக்குத் தகுதியானவர்களாகத் தேர்வு செய்யும் பணி (ஸ்லைடிங்) 2நாள்கள் நடைபெற்றது.இதில், 1,330 இடங்கள் நிரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து காலியாக உள்ள 758 இடங்களுக்காக இரண்டாம் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை31, ஆகஸ்ட் 1ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் இடங்களைத் தேர்வு செய்பவர்களுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறுகிறது.இதிலும் இடங்கள் காலியாக இருந்தால் ஆகஸ்ட் 6ஆம் தேதிமீண்டும் ஸ்லைடிங் நடத்தப்பட்டு அவர்களுக்கு ஆகஸ்ட் 8, 9ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு நடைமுறைகள் தாமதமாவதால் வகுப்புகள் தொடங்குவது ஆகஸ்ட் 2ஆவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஆகஸ்ட் 1ஆம் தேதியே முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என துணைவேந்தர் கு.ராமசாமி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி