எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன?: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2018

எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன?: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

சென்னையில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சுபாஷ் சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பள்ளிகளில் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. உலக சுகாதார அமைப்பு உடற்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.தமிழகத்தில் 9,000 பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர்.

பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் இருப்பது விதிமீறல். ஆனால், இதனைமாநில அரசும் , சிபிஎஸ்இ நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. எனவே, உடற்கல்வியை பயிற்றுவிப்பதுதொடர்பாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உரிய விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சிபிஎஸ்இ நிர்வாகத்தையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டனர்.


மேலும், சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட உடற்கல்வி தொடர்புடைய வசதிகள் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையைஒத்திவைத்தனர்.

1 comment:

  1. உடற்கல்வி ஆசிரியரையே இங்க பகுதி நேரமாதான் வச்சிருக்காங்க இதிலிருந்தே தெரிஞ்சிக்கோங்க நம்ம ஊர்ல உடற்கல்வியோட தரத்த...........?அனைத்தையும் கருனையுடன் பரீசீலித்து அதை நிறைவேற்றுவதுதான் ஆட்சியாளர்களின் கடமை.........என்று நடக்கும்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி