கவர்னரை சந்தித்து பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை மனு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2018

கவர்னரை சந்தித்து பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை மனு

மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் 20.07.2018ல் புதுக்கோட்டை மாவட்ட சுற்றுப்பயணத்தின்போது புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில தலைமை நிர்வாகி ம.அருளப்பன் தலைமையில் வெ.பழனிவேல் மற்றும் பா.தர்மராஜ் முன்னிலையில் பி.ஷேக்அப்துல்லா,
பா.வீரமணிகண்டன், எ.மதிராஜா, எம்.தர்மாராஜ், கே.அம்பிகா, ஆர்.நித்யா,  ஆர்.செந்தில்குமாரி, த.அனுசியா, எம்.அனு, சு.மகேஸ்வரி, எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மேதகு தமிழக ஆளுநர் அவர்களை சந்தித்து சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை மனுவை அளித்தனர். அதில்  இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 141ன்படி சமவேலை  சமஊதியம் மற்றும் சமீபத்தில் தமிழக அரசு பணிநிரந்தரம் அறிவித்துள்ள ஒப்பந்த செவிலியர்கள், தொகுப்பூதிய கல்லூரி விரிவுரையாளர்களைப்போல 2012ல் நியமனம் செய்யப்பட்ட தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக நியமித்து பணிநிரந்தரம் செய்யக் கோரப்பட்டது. பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை விவரங்களை எம்.ஏ,அப்ரோஸ் ஆசிரியை அவர்கள் ஹிந்தியில் மொழிபெயர்த்து மேதகு ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைத்து உதவினார். மேதகு ஆளுநர் அவர்கள் உடனடியாக IAS அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி செயலருக்கு பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோரிக்கை மனு மற்றும் கவர்னர் சந்திப்பு படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.


சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி