மருத்துவப் படிப்புக்கான தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் மற்றும் தேர்வுக்குழு செயலர் செல்வராஜன்,
ஜூலை 16,17,18-ம் தேதிகளில் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கவும், 196 மதிப்பெண்களைச் சேர்த்து புதிய தரவரிசை பட்டியல் தயாரிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட்டிருந்தது.
உயர்நீதிமன்ற கிளை உத்தரவையடுத்து நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வில் 3,882 இடங்கள் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 16,17,18-ம் தேதிகளில் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கவும், 196 மதிப்பெண்களைச் சேர்த்து புதிய தரவரிசை பட்டியல் தயாரிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட்டிருந்தது.
உயர்நீதிமன்ற கிளை உத்தரவையடுத்து நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வில் 3,882 இடங்கள் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி