TNPSC - குரூப்-2 தேர்வு அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2018

TNPSC - குரூப்-2 தேர்வு அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்!

நகராட்சி ஆணையர் (கிரேடு-2), சார்-பதிவாளர் (கிரேடு-2), துணை வணிகவரி அதிகாரி, தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்,
பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் ஏறத்தாழ 2500 காலியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு ஓரிருநாளில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குரூப்-2 தேர்வுக்கான கல்வித்தகுதி பட்டப் படிப்பு ஆகும். இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வைப் போன்று முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு இரு தேர்வுகளும் உண்டு. குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பல தனியார் பயிற்சி மையங்களில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி