TNPSC - குரூப் 2ஏ தேர்வு: சான்றிதழ் குறைபாடுடையோர்நேரில் வர அழைப்பு!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2018

TNPSC - குரூப் 2ஏ தேர்வு: சான்றிதழ் குறைபாடுடையோர்நேரில் வர அழைப்பு!!!

குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோரில் சிலருடைய சான்றிதழ் குறைபாடாக இருப்பதால் அவர்கள் நேரில் வர, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-


குரூப் 2ஏ தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றோரில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக மொத்தம் 6,836 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டனர்.6,171 விண்ணப்பதாரர்கள் மட்டும் அவர்களின் மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்தனர். பதிவேற்றம் செய்யப்பட்ட 6,171 விண்ணப்பங்களை ஆய்வு செய்ததில் 2 ,229 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

 இந்த விண்ணப்பதாரர்கள் வரும் 16 முதல் 23-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாணைய அலுவலகத்தில் நேரடியாகக் கலந்து கொள்வதற்கான விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

1 comment:

  1. Idhu miss aanavangalaa appo selection list illaya

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி