2019 தேர்தலில் ஒப்புகைச் சீட்டு அமல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2018

2019 தேர்தலில் ஒப்புகைச் சீட்டு அமல்!

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில், தேர்தலின்போது ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ நேற்று (ஆகஸ்ட் 3) தெரிவித்தார்.
வாக்கு இயந்திரங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து, சென்னை கிண்டியில் 32 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசினார் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ. அப்போது, வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது அனைத்து வாக்குச் சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய ஒப்புகை சீட்டு வழங்கும் முறை நடமுறைப்படுத்தப்படும் என்று கூறினார்.

 தொடர்ந்து பேசியவர், தலைமைத் தேர்தல் ஆணையம் தேதி அறிவித்த பிறகு காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்' என்று தெரிவித்தார் சாஹு.இதனைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு எந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி