பக்ரீத் விடுமுறை ஆகஸ்ட் 23-க்கு மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2018

பக்ரீத் விடுமுறை ஆகஸ்ட் 23-க்கு மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு

பக்ரீத் பண்டிகை விடுமுறை வரும் 22-ஆம் தேதிக்குப் பதிலாக வரும் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
மத்திய அரசின் சார்பில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2018-ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.அதில், பக்ரீத் பண்டிகை விடுமுறை ஆகஸ்ட் 22-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகை 23-ஆம் தேதி வருவதாகவும், அன்றைய தினமே அரசு விடுமுறை அறிவிக்க வேண்டுமெனவும் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, தில்லி மற்றும் புதுதில்லியில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் வரும் 23-இல் பக்ரீத் பண்டிகைக்கான அரசு விடுமுறை விடப்படும். தில்லி மற்றும் புதுதில்லிக்கு வெளியே உள்ள மாநில அரசு அலுவலகங்கள் பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை விஷயத்தில் அவர்களாகவே ஆலோசித்து முடிவினை எடுத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி