பள்ளிக்கல்வித்துறை சார்பில் கேரளத்துக்கு ரூ.2 கோடி நிவாரணப் பொருட்கள்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2018

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கேரளத்துக்கு ரூ.2 கோடி நிவாரணப் பொருட்கள்: அமைச்சர் செங்கோட்டையன்


கேரளத்தில் பெய்த கனமழையால் 8.69 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் வீடு, வாசல் மற்றும் உடமைகளை இழந்து 2,787 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 417 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கேரளத்துக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ரூ.2 கோடிக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டிளித்தார்.

முன்னதாக, கேரளத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கின. மேலும், பல்வேறு அரசு அதிகாரிகள், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் வெள்ள பாதிப்புகளுக்கு பல கோடி ரூபாய் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Teachers salary keta or new appointment ah teacher podunganu sonna no money nu solra minister kerala Ku eppadi 2 cr koduthar?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி