டிசம்பர் 31-க்குப் பின் உங்கள் ஏடிஎம் கார்டு வேலை செய்யாமல் போக வாய்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2018

டிசம்பர் 31-க்குப் பின் உங்கள் ஏடிஎம் கார்டு வேலை செய்யாமல் போக வாய்ப்பு!

ATM card might not work after December 31

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ அன்மையில் மேக்னட்டிக் டேப் உள்ள பழைய ஏடிஎம் டெபிட் கார்டுகள வேலை செய்யாது என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது.

பழைய கார்டுகள் வைத்துள்ள வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கு உள்ள கிளைகளுக்குச் சென்று சிப் வைக்கப்பட்டுள்ள கார்டுகளுக்காகக் கோரிக்கையினை அளிக்குமாறும் தெரிவித்துள்ளது.

டிவிட்டர் அறிவிப்பு
எஸ்பிஐ வங்கி டிவிட்டரில் ஆர்பிஐ விதிகளின் படி 2018-ம் ஆண்டுக்கு பிறகு பழைய மேக்னட்டிக் டேப் உள்ள எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் செல்லாது என்றும், இந்தக் கார்டு மாற்ற முறை பாதுகாப்பானது என்று கட்டணம் ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
 

வாடிக்கையாளர்கள்
எனவே எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுகளை மாற்ற கோரிக்கையினை அளிக்குமாறும் டிசம்பர் 31 வரை செய்யவில்லை என்றால் பழைய கர்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் செல்லாது என்று கூறுகின்றனர்.

 

சுதேசி
இந்தியாவின் நம்பர் 1 சுதேசி நிறுவனம் என்ற பெயரினை பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ பெற்றுள்ளது. நிதி துறையிலும் எஸ்பிஐ-க்கு அடுத்தபடியாக எல்ஐசி நிறுவனம் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி