பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் செப். 3 முதல் தொடக்கம் -அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2018

பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் செப். 3 முதல் தொடக்கம் -அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!



அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் 509 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப். 3 முதல் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்து சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தல் ஆகஸ்ட் 20ம் தேதி முடிந்தது. இதற்காக 9,700 பேர் விண்ணப்பித்தனர். இந்த மாணவர்களுக்கு நேற்று கலந்தாய்வு தொடங்கியது.

 தரவரிசை அடிப்படையில் நேற்றும், இன்றும் தலா 4 ஆயிரம் பேர் வீதம் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். துணை கலந்தாய்வில் சீட் தேர்வு செய்த மாணவர்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதி வகுப்புகள் தொடங்குகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி