நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
நீட் எனப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே நாடு முழுவதும்மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் இருக்கும் 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 447 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அரசு பள்ளிகளில் படித்த 4 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு2 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தநிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
2016-ஆம் ஆண்டு நீட் தேர்வு இல்லாமல் 12-ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள்அடிப்படையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடந்த போது அரசு பள்ளியில் பயின்ற 30 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை வெறும் 4ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 26 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி