69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான இடைக்கால மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2018

69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான இடைக்கால மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாடு முழுவதும் மாநில அரசுகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மிகாமல் இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 1992-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. ஆனால் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தின்படி, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையிலும் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையால் தங்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை எனக்கூறி சென்னையை சேர்ந்த 2 மாணவியர் சஞ்சனா, அகிலா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மாணவிகளின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மூல வழக்கு நவம்பர் மாதத்தில் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி