கண்காணிப்பாளர் வேண்டாம்; நேர்மையாகதேர்வு எழுதுவோம்: அசத்திய கல்லூரி மாணவர்கள்; பெருமிதத்தில் கல்லூரி முதல்வர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2018

கண்காணிப்பாளர் வேண்டாம்; நேர்மையாகதேர்வு எழுதுவோம்: அசத்திய கல்லூரி மாணவர்கள்; பெருமிதத்தில் கல்லூரி முதல்வர்

உடுப்பி மாவட்டத்தில் கிராஸ்லேண்ட் கல்லூரி மாணவ மாணவிகள் கண்காணிப்பாளர் இல்லாமல் தேர்வு எழுதினர்.
தேர்வு அறையில் மேற்பார்வையாளர் இருந்தாலே காப்பியடிப்பதில் வல்லவர்களான மாணவர்கள் இருக்கும் வேளையில் மேற்பார்வையாளரே வேண்டாம் நாங்கள் நேர்மையாக தேர்வு எழுதுவோம் என்று உடுப்பி மாவட்டத்தின் பிரமாவரில் தி கிராஸ்லேண்ட் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதி அசத்தியுள்ளனர்.பி.ஏ., பி.காம் தேர்வு எழுதிய 19 மாணவர்கள் இந்த முயற்சியைக் கோரிக்கையாக வைத்து அதற்கு கல்லூரி நிர்வாகவும் சம்மதித்து தேர்வு எழுதியுள்ளனர்.

இந்தக் கல்லூரியின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300. அதில் 19 மாணவர்கள் எங்களுக்கு தேர்வில் கண்காணிப்பாளர் வேண்டாம், நாங்கள் நேர்மையாகத் தேர்வு எழுதுவோம் என்று கோரிக்கை எழுப்ப, கல்லூரி முதல்வர் எஸ்.கே.சாமுவேல் இதற்குச் சம்மதம்தெரிவித்தார்.இந்தக் கோரிக்கை வைத்த மாணவர்களை அழைத்து அவர் ஏன் இந்த முடிவு என்று கேட்டுள்ளார். அதற்கு மாணவர்கள் கண்காணிப்பாளர் தேவையில்லை நாங்கள் ஒரு போதும் தவறான பாதையில் செல்ல மாட்டோம், நேர்மையாக எழுதுவோம் என்று கூறியுள்ளனர்.

இதற்குச் சம்மதம் தெரிவிக்கப்பட்டு தேர்வும் எழுதப்பட்டதையடுத்து இதே நடைமுறையில் பல மாணவ மாணவிகளும் இணைய ஆர்வம் காட்டியுள்ளதாக முதல்வர் சாமுவேல் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி