மூன்றாவது மகப்பேறு விடுமுறை மறுப்பது சட்ட விரோதம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2018

மூன்றாவது மகப்பேறு விடுமுறை மறுப்பது சட்ட விரோதம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

‘அரசு பெண் ஊழியருக்கு 3வது பிரசவத்திற்கு விடுமுறை மறுப்பது சட்ட விரோதம்’ என்று உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், ஹல்த்வானி பகுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஊர்மிளா மனீஷ். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. 3வது முறையாக கர்ப்பிணியான ஊர்மிளா, பேறுகால விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜீவ் சர்மா, 3வது பிரசவத்திற்கு விடுமுறை அளிக்க மறுக்கும் அரசின் விதிமுறை சட்ட விரோதமானது. மனுதாரருக்கு மனிதாபிமான அடிப்படையில் பேறுகால விடுமுறை வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி