லட்ச கணக்கில் தற்காலிக அரசு வேலை வாய்ப்புகள்.. அரசின் அடுத்த அதிரடி..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2018

லட்ச கணக்கில் தற்காலிக அரசு வேலை வாய்ப்புகள்.. அரசின் அடுத்த அதிரடி..!


மத்திய அரசு வேலையின்மை சதவீதத்தினைக் குறைக்கப் புதிய முடிவினை எடுத்துள்ளது.

இதன் மூலம் ரீடெயில், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் விவசாயத் துறைகளில் தற்காலிக அரசு வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

வேலை தேடல்
இந்திய பொருளாதாரம் கண்காணிப்பு மையத்தின் அறிக்கையின் படி இந்தியாவில் 2018-2019 நிதி ஆண்டில் 3.1 கோடி நபர்கள் வேலை வாய்ப்பினை தேடி வருகின்றனர் என்று கூறுகின்றது.
 
சரிவு
தற்போது இந்தியாவில் வேலையில் உள்ள மக்கள் எண்ணிக்கை 0.01 சதவீதம் எனச் சென்ற ஆண்டு இருந்த 40.67 கோடியில் இருந்து 40.62 கோடி என 4.65 வேலை வாய்ப்புகள் சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

காரணம்
இந்தியாவில் உள்ள இந்த வேலையின்மைக்கான காரணமானது முதலீடுகள் சரிந்து வருவதே என்றும் கூறுகின்றனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வேலையின்மை என்பது பெறும் அளவில் சரிந்துள்ளதாகவும் சர்வே முடிவுகள் கூறுகின்றனர்.
 
தற்காலிக வேலை வாய்ப்புகள்
தேசிய மாதிரி ஆய்வு கணக்கெடுப்பு அலுவலகம், ஆயுஷ்மன் பாரத், தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (NHPM), ஸ்மார்ட் சிட்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களின் கீழ் மத்திய அரசு லட்சம் கணக்கான தற்காலிக அரசு வேலை வாய்ப்புகளை அளிக்க உள்ளது.
2018-2019 நிதி ஆண்டில் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் அரசு நிறுவனங்களில் கிடைத்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் எவ்வளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரியவில்லை என்றும் தற்காலிக வேலை வாய்ப்பினால் என்ன பயன் என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.

தேர்தல்
2019-ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வர இருக்கும் நிலையில் மத்திய அரசு தற்காலிக வேலை வாய்ப்பினை அளிப்பதன் மூலம் இந்த வேலையின்மை அதிகரிப்பு என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தினை மத்திய அரசு தவிடு பொடியாக்கத் திட்டமிட்டுள்ளது.

ஆயூஷ்மான் பாரத்
ஆயூஷ்மான் பாரத் எனப்படும் ஏழைக் குடும்பங்களுக்கான மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் கீழ் 1 லட்சத்திற்கு மேற்பட்ட நபர்களைப் பணிக்கு எடுத்துக் குடும்பங்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
 
மறுப்பு
மத்திய மற்றும் மாநில நிறுவனங்களில் 24 லட்சம் காலியிடங்கள் உள்ளதாக அன்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரதமர் மோடி வேலையினை அதிகரித்து இருப்பதினை மறுத்து வருகிறார்.
 

மோடி
பிரதமர் மோடி அவர்கள் அன்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் போது எப்படி வேலை வாய்ப்புகள் உருவாகாமல் இருக்கும்? ரயில் பாதை, சாலை எனக் கட்டுமான திட்டங்கள், சூரிய ஒளி மின்சாரப் பூங்காக்கள் எனப் பல திட்டங்கள் கோடி கணக்கான செலவுகளில் நடைபெற்று வரும் நிலையில் எப்படி வேலை வாய்ப்பு உருவாகாமல் இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.
அது மட்டும் இல்லாமல் வணிக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது, இதுவெல்லாம் வேலைவாய்ப்பின்மை உருவாக்கவில்லை என்பதைக் காட்டுகிறதா என்றும் பதில் அளித்துள்ளார்.

5 comments:

  1. EMIமூலம் பொருட்கள் வாங்கும்அளவை வைத்து, வாங்கும் சக்தி அதிகரித்து உள்ளது ....
    என்று கணக்கிட்டு
    இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது
    என்று கூறுவதெல்லாம்
    எவ்வளவு பெரிய பொருளாதார நிபுணத்துவத்தைக் காட்டுகிறது....

    ReplyDelete
  2. படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை உங்களது திட்டத்தை விட பலமடங்கு ஆண்டுதோறும் உயர்ந்து
    வரும் நிலையில் பிரதமரின் பதில் பொருந்தவில்லை

    ReplyDelete
  3. எப்படியோ மக்களுக்கு வேலை தந்தால் போதும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி