காமராஜர் விருதுக்கு, மாவட்ட வாரியாக மாணவர்கள் விபரம் சேகரிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2018

காமராஜர் விருதுக்கு, மாவட்ட வாரியாக மாணவர்கள் விபரம் சேகரிப்பு!

காமராஜர் விருதுக்கு, மாவட்ட வாரியாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது.

தமிழகத்தில், தமிழ் வழியில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்த மாணவர்களில், மாவட்டத்தில் சிறந்து விளங்கும், 20 பேர் வீதம், தேர்வு செய்து, பரிசுத்தொகையுடன், காமராஜர் விருது வழங்கப்படவுள்ளது.அதற்காக, மாவட்ட வாரியாக, விபரம் திரட்டும் பணி நடக்கிறது.

அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, படிவம் வழங்கப்பட்டுள்ளது.அதில், பொதுத்தேர்வு மதிப்பெண்கள், 60, இதர திறன்கள் மற்றும் நடவடிக்கைக்கு, 100 மதிப்பெண்கள் என, மதிப்பீடு செய்து, ஒவ்வொரு பள்ளிகளில், அதிக மதிப்பெண் பெற்ற மூன்று மாணவர்களின் விபரங்களை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில், சிறந்து விளங்கிய, 10ம் வகுப்பில், 20 மாணவர்கள்; பிளஸ் 2வில், 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா, 10 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி