நீண்ட இழுபறிக்கு பின் கலந்தாய்வு அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2018

நீண்ட இழுபறிக்கு பின் கலந்தாய்வு அறிவிப்பு!

அரசு கலை கல்லுாரி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, நீண்ட இழுபறிக்கு பின், தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
'விருப்பமுள்ளோர், 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டு தோறும், பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, மே-, ஜூன் மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். பேராசிரியர்கள் தரப்பில் பல முறை கோரிக்கை வைத்தும், நடப்பு கல்வியாண்டிற்கான கலந்தாய்வை அறிவிப்பதில் தாமதம் நிலவியது.

இதற்கிடையே, 33 பேருக்கு நிர்வாக காரணங்கள் என்ற பெயரில் இடமாறுதல் அளித்தது, அதிருப்தியை ஏற்படுத்தியது. முறைகேடான இடமாற்றங்களை தவிர்ப்பதற்காக, பேராசிரியர் சங்கங்கள் சார்பில், போராட்டங்கள் நடத்த ஆலோசித்த நிலையில், கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இடமாறுதல் கலந்தாய்வு, செப்., 10, 11, 12 ஆகிய தினங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை, 30ம் தேதி முதல் செப்., 4 வரை, பேராசிரியர்கள் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள், www.tndcein என்ற இணைய தளத்தில் பதிவிடப்படும்.'இணையதளத்தில் பதிவுகளை மேற்கொள்ளாமல், நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி