மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தமானது- உயர் நீதிமன்றம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2018

மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தமானது- உயர் நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ படிப்புக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தமானது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படிக்கும் 19 மாணவர் கள் தங்களுக்கு கருணை மதிப் பெண்கள்வழங்கி மருத்துவ படிப்பை நிறைவு செய்ய அனு மதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப் பித்த உத்தரவில், ‘‘கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டு மென்பதை மாணவர்கள் உரிமை யாக கோர முடியாது. கருணை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து பல்கலைக்கழகம்தான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும், மனித உயிர்களை காப்பாற்றும் மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கருணை மதிப் பெண்கள் வழங்குவது என்பது அபத்தமானது.எனவே கருணை மதிப் பெண்கள் வழங்கு வதை ரத்து செய் வது தொடர்பாக விதிகளில் திருத் தம் கொண்டு வர வேண்டும். ஏனெ னில் கருணை மதிப்பெண் பெற்று மருத்து வரானவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாது.அதுபோன்ற நபர்களிடம் தங்க ளது உயிரை பணயம்வைக்க யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடுவதையும் தவிர்க்க வேண்டும்” எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.

1 comment:

  1. கருணை மதிப்பென் பெற்று மக்களை கருனையே இல்லாமல்......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி