கலைஞர் கருணாநிதி செய்த சாதனைகள் பட்டியல் - தெரிந்துகொள்வோம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2018

கலைஞர் கருணாநிதி செய்த சாதனைகள் பட்டியல் - தெரிந்துகொள்வோம்!


1) இந்தியாவிலேயே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்.

2) குடியிருப்பு சட்டம் அதாவது வாடகை நிர்ணயம் சட்டம் போன்றவைகளை அமைத்து தந்தது தலைவர் கலைஞர்.
3) இலவச கான்கிரீட் வீடுகளை ஒதுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தவர் கலைஞர்.
4) கையில் இழுக்கும் ரிக்க்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்க்ஷா தந்தவர் கலைஞர்.
5) பிச்சைகாரர்களுக்கு மறு வாழ்வுமையம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்
6) முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
7) குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
8) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
9) 1500பேர் கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.
10) மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.
11. போக்குவரத்தை தேசியமயமாக்கிவர் கலைஞர்.
12. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியவர் கலைஞர்.
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்து தந்தவர் கலைஞர்.
14.அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பை தந்தவர் கலைஞர்.
15.அரசியலமைப்பில் BC-31% , SC-18% ஆக உயர்த்தி தந்தவர் கலைஞர்.
16. P.U.C வரை இலவச கல்வி உருவாக்கி தந்தவர் கலைஞர்.
17. மே 1 சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தவர் கலைஞர்.
18. நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவித்தவர் கலைஞர்.
19. முதல் விவசாயக் கல்லூரியை உருவாக்கி தந்தவர் கலைஞர்.(கோவை)
20. அரசு ஊழியர்கள் குடும்ப நலதிட்டம் தந்தவர் கலைஞர்.
21. அரசு ஊழியர்களுக்கு மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தவர் கலைஞர்.
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தவர் கலைஞர்.
23. கோயில்களில் குழந்தைகளுக்கான கருணை இல்லம் தந்தவர் கலைஞர்.
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.
25. நில விற்பனை வரையரை சட்டத்தை அமைத்தவர் கலைஞர்.
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின் உற்பத்தி நெய்வேலிக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.
27. பெட்ரோல்  தொழிற்சாலையை தூத்துகுடிக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.
28. SIDCO உருவாக்கியது கலைஞர்.
29. SIPCOT உருவாக்கியது கலைஞர்.
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தவர் கலைஞர்.
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டு வந்தவர் கலைஞர்.
32. மனு நீதி திட்டம் தந்தவர் கலைஞர்.
33. பூம்புகார் கப்பல் நிறுவனத்தை தந்தவர் கலைஞர்.
34. பசுமை புரட்சி திட்டத்தை தந்தவர் கலைஞர்.
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தவர் கலைஞர்.
36. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர் சீர் மரபினரை சேர்த்தவர் கலைஞர்.
37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
40. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தவர் கலைஞர்.
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தவர் கலைஞர்.
42. தாழ்த்தப்பட்டோர்களுக்கு இலவச கல்வி தந்தவர் கலைஞர்.
43. இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தவர் கலைஞர்.
44. சொத்தில் பெண்ணுக்கும் சம உரிமை உள்ளது என சட்டமாக்கியது கலைஞர்.
45. அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தவர் கலைஞர்.
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.
49. நேரடி நெல் கொள்முதல் மையம் அமைத்து தந்தவர் கலைஞர்.
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தவர் கலைஞர்.
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகத்தை அமைத்தவர் கலைஞர்.
52.கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டத்தை தந்தவர் கலைஞர்.
53. பெண்கள் சுய உதவி குழுக்களை அமைத்து தந்தவர் கலைஞர்.
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.
56. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.
57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்.
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டு வந்தவர் கலைஞர்.
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தவர் கலைஞர்.
61. மெட்ராஸ்/சென்னை :கலைஞர் (Arignar Anna CM )
62. முதல் முறையாக விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடமளிக்க வழிவகை செய்தது கலைஞர்.
63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்து தந்தவர் கலைஞர்.
64. முதல் முறையாக விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்.
65. கிராமங்களில் கான்கீரிட் சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.
66. 24 மணி நேரமும் மருத்துவ சேவை தந்தவர் கலைஞர்.
67. தொழில்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
68. சமத்துவபுரம் தந்தவர் கலைஞர்.
69. கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டு வந்தவர் கலைஞர்.
70. இந்தியாவிலேயே முதன் முறையாக டாக்டர் அம்பேத்கார் பெயரில் சட்ட கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.
71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியவர் கலைஞர்.
72. உலக தமிழர்களுக்கு உதவ தமிழ் மெய்நிகர் பல்கலைகழகத்தை தந்தவர் கலைஞர்.
73. உருது அக்காடமி தந்தவர் கலைஞர்.
74. சிறுபான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தியவர்கலைஞர்.
75. உழவர்சந்தை திட்டத்தை தந்தவர் கலைஞர்.
76. வருமுன் காப்போம் திட்டத்தை தந்தவர் கலைஞர்.
77. கால்நடை பாதுகாப்பு திட்டத்தை தந்தவர் கலைஞர்.
78. 133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில் வைத்தவர் கலைஞர்.
79. டைடல் பார்க் சென்னையில் அமைத்தவர் கலைஞர்.
80. வீட்டுமனை வழங்கும் திட்டத்தை தந்தவர் கலைஞர்.
81. மாவட்ட,மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தவர் கலைஞர்.
82. ஆசியாவிலேயே மிக பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேடு நிலையம் அமைத்து தந்தவர் கலைஞர்.
83. விவசாய கூலி வேலை செய்வோர்களுக்கு நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
84. பொது கூலிவேலை செய்வோர் நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
85. அறிஞர்களுக்கும்,தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டிதந்தவர் கலைஞர்.
86. 20 அணைகள் கட்டி தந்தவர் கலைஞர்.
87. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்.
88. மதுரை நீதிமன்றம் கட்டி தந்தவர் கலைஞர்.
89. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்.
90.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தந்தவர் கலைஞர்.
91. நமக்கு நாமே திட்டத்தை தந்தவர் கலைஞர்.
92. நலிவுற்ற குடும்பநல திட்டத்தை தந்தவர் கலைஞர்.
93. 9 மாவட்டங்களில் புதிய மாவட்டாச்சியர் அலுவலகங்களை கட்டி தந்தவர் கலைஞர்.
94. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தவர் கலைஞர்.
95. 13000 மக்கள் நலப்பணியாளர்கள் நியமனம் செய்தவர் கலைஞர்.
96. முதல் முறையாக 10000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தவர் கலைஞர்.
97. சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 9 மேம்பாலங்களை கட்டி தந்தவர் கலைஞர்.
98. ரூ.1500 கோடியில் 350 துணை மின்நிலையங்களை உருவாக்கியவர் கலைஞர்.
99. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.
100. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.
101. வேலூர்,தூத்துகுடி,கன்னியாகுமரியில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைத்து தந்தவர் கலைஞர்.
102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய். திட்டத்தை தந்தவர் கலைஞர்.
103. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்ணை மற்றும் பல வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர்.
104. நியாயவிலைக்டையில் 10 சமையல் பொருட்க்களை ரூ.50 க்கு தந்தவர் கலைஞர்.
105. விவசாய கடன் 7000 கோடியை தள்ளுபடி செய்யவைத்தவர் கலைஞர்.
106. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றவர் கலைஞர்.
107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ.1050 ஆக உயர்த்தியவர் கலைஞர்.
108. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ.1100 ஆக உயர்த்தியவர் கலைஞர்.
109. 172 உழவர் சந்தைகளாக உயர்த்தியவர் கலைஞர்.
110. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ.2000 ஆக உயர்த்தியவர் கலைஞர்.
111. மாவட்டத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
112. ரூ.189 கோடி செலவில் காவிரி- குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
113. ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி-கருமேனியாரு-நம்பியாரு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
114. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தவர் கலைஞர்.
115. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் கலைஞர்.
116. 10 ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயபாடமாக்கியது கலைஞர்.
117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் பணி செய்தவர் கலைஞர்.
118. அர்ச்சகர்கள்,பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியவர்
119. ரூ.2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தவர் கலைஞர்.
120. இதயநோய்,சர்க்கரை நோய்,புற்று நோய்க்கான நலமான தமிழகம் திட்டம் தந்தவர் கலைஞர்.
121. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை தந்தவர் கலைஞர்.
122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புதிய
       நிறுவனங்களை வர செய்து 41,090 கோடி முதலீடை கொண்டுவந்தவர் கலைஞர்.
123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்தவர் கலைஞர்.
124. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தவர்  கலைஞர்.
125. புதிய டைடல் பார்க் திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வேலியில் உருவாக்கியவர்
126. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.
127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000 புதிய பேருந்துகளை தந்தவர் கலைஞர்.
128. அருந்ததியினர் இனத்திற்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
129. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்தை உருவாக்கியவர் கலைஞர்.
130. 420 பேரூராட்சிகள் உருவாக்கி அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.
131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர்.
132. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நிறுவியவர் கலைஞர்.
133. ஆசியாவையே திரும்பி பார்க்கவைத்த புதிய சட்டமன்றம் நிறுவியவர் கலைஞர்.
134. அடையார் சூழியல் ஆராய்ச்சி பூங்கா அமைத்தவர் கலைஞர்.
135. சென்னை செம்மொழி பூங்கா அமைத்து தந்தவர் கலைஞர்.
136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தவர் கலைஞர்.
137. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தவர் கலைஞர்.
138. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர்.
139. ராமநாதபுரம்-பரமக்குடி கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர்.
140. கலைஞர் வீடு திட்டம் தந்தவர் கலைஞர்.
141. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.
142. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர்.
143. 119 புதிய நீதிமன்றங்களை உருவாக்கியவர் கலைஞர்.
144. மாலை நேரம் மற்றும் விடுமுறை தின நீதிமன்றங்களை உருவாக்கி தந்தவர் கலைஞர்.
145. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வேலியில் உருவாக்கி தந்தவர் கலைஞர்.
146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்து தந்தவர் கலைஞர்.
147. சமச்சீர் கல்வி தந்தவர் கலைஞர்.
148. இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம் தந்தவர் கலைஞர்.
149. முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி         கட்டணம் வழங்கியவர் கலைஞர்.
150. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர்
151. இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.
152. பேருந்து,பால்,மின்சார கட்டணங்களை உயர்த்தாதவர் கலைஞர். ஏன் என்றால் அது        ஏழை,நடுத்தரவர்க்கங்களின் அவசிய பயன்பாடு.
153. மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ கல்லூரி,பொறியியல் கல்லூரி துவக்கியவர் கலைஞர்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி