திருமணப்பதிவையும் இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2018

திருமணப்பதிவையும் இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்


தமிழகத்தில் பத்திரப்பதிவை போல திருமணப்பதிவும் இனி இணையதளம் வாயிலாக பதிவு செய்யும் முறை விரைவில் நடைமுறைக்கு வருகிறது.
அது இன்று முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைக்கு வருகிறது. அனைத்து வகையான சான்றிதழ்களையும் ஆன்லைன் வாயிலாக வழங்கும் முறை குறித்து சார் பதிவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளது.

இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. மேலும், திருமணம், சீட்டு மற்றும் சங்கங்கள் இதன் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இந்த அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்யும் திட்டத்தை கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பிப்ரவரி 13ம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.

தற்போது பெரும்பாலான பத்திரங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இந்நிலையில், திருமணம், சீட்டு, சங்கம் உள்ளிட்ட 17 இனங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை கொண்டு வர பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, சார்பதிவாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. GOVERNMENT AIDED SCHOOL VACANCIE FOR PERMANENT POST
    💐BT பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
    🦋
    🌸SC- SCIENCE- 3

    CANDIDATE MALE&FEMALE
    🌸PG- BC Nadar-Chemistry

    🌹 MBC- HISTORY
    MALE&FEMALE
    🌺SC-A TAMIL MALE&FEMALE
    💐Dted - Bc and Mbc heavy Amount payable candidates
    🌷SCA-and BC PET உடற்கல்வி
    MALE&FEMALE
    Immediately send your resume or contact information to govtaidjob@gmail.com immediately

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி