கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிப்பு மீண்டும் நிறுத்தம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2018

கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிப்பு மீண்டும் நிறுத்தம்!

கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக, நேற்று முன்தினம் வெளியான அறிவிப்புகள், திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஓட்டு எண்ணவும், முடிவுகளை அறிவிக்கவும் விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உயர் நீதிமன்றம், வழக்கு நிலுவையில் உள்ள சங்கங்களுக்கு மட்டும், தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என, நேற்று முன்தினம், உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து, 'இரண்டாம் நிலை சங்கங்களுக்கு, தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் முடிவுகள்; மூன்று, நான்காம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு, நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.மூன்று மற்றும் நான்காம் நிலையில் உள்ள, கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல், ஆக., 6ல் நடைபெறும் என, தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர், ராஜேந்திரன் அறிவித்தார்.

இந்நிலையில், இந்த அறிவிப்புகள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.'நீதிமன்ற உத்தரவு முழுமையாக வராததால், நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட அறிவிப்பு,நிறுத்தி வைக்கப்படுகிறது. தேர்தல் தொடர்பான மறு அட்டவணை, பின் அறிவிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி