அனைத்துப் பள்ளிகளிலும் ஆர்.ஓ. வாட்டர்!-தமிழக அரசு அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2018

அனைத்துப் பள்ளிகளிலும் ஆர்.ஓ. வாட்டர்!-தமிழக அரசு அரசாணை வெளியீடு!


தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், மாணவர்கள் நலன் கருதி ரூ.49 கோடி செலவில் சுத்தமான குடிநீர் வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள 2,448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.48 கோடியே 96 லட்சம் செலவில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என சட்டமன்றக்கூட்டத்தில் கடந்த ஜுன் மாதம் 1ஆம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார். பள்ளிகளின் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருக்கும் நீரானது, ஆர்.ஓ. எனப்படும் சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பள்ளிக்கு ரூ.2 லட்சம் வீதம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, 48.96 கோடி ரூபாயில் சுத்திகரிப்புக் கருவிகள் பொருத்தப்படவுள்ளது. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஒரு தொகுதிக்கு ரூ.15 லட்சம் வீதம் 35.10 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதித் தொகையானது தொகுதியின் வரையறுக்கப்படாத நிதியின் கீழ், மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக ஒதுக்கப்படும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி