BRTE - 3890 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி நிரவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2018

BRTE - 3890 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி நிரவல்!

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை கவுன்சலிங் மூலம் பணி  நிரவல் செய்து மாறுதல் வழங்க அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல் மற்றும் பொது மாறுதல் கவுன்சலிங்  நடத்த ஏற்கனவே இரண்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.  இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் கடந்த பிப்ரவரி மாதம் அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் 350  ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டனர். மேலும், ஜூன் 16ம் தேதி நடந்த  கவுன்சலிங்கின் மூலம் 103 ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மாறுதல் மூலம் சென்றுவிட்டனர். அதனால் மொத்தமுள்ள 4587 பணியிடங்களில் 594ஆக இருந்த காலிப் பணியிடம் மேலும் அதிகரித்து தற்போது 697 ஆக உள்ளது. அதனால் ஆசிரியர் பயிற்றுநர்கள்  எண்ணிக்கை 3890ஆக குறைந்து  மாநிலம் முழுவதும் சமநிலையற்று காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் 15 சதவீத  காலிப்பணியிடங்களை மாவட்ட மற்றும் வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப்பணியிடமாக ஒதுக்கிவிட்டு, கவுன்சலிங்  மூலம் பணி நிரவல் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் கவுன்சலிங் மூலம்  மாறுதல் வழங்க இயக்குநர் அனுமதி கேட்டுள்ளார். அவரின்  கருத்துருவை அரசு ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் மாநில  திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளபடி 3890 ஆசிரியர் பணியிடங்களில்மாநில சராசரி  காலிப்பணியிடங்களை தவிர்த்துவிட்டு அதற்கு மேற்பட்டு வரும் காலிப் பணியிடங்களையும் கவுன்சலிங் நடத்தி மாறுதல் வழங்க  அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி