வியாழன் (16/8/18)அன்று
*சென்னையில்
CEO, DEO- ஆகியோர் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில்,
CEO அவர்கள் BEO அனைவருக்கும் வழங்கிய அறிவுரை :
1)இக்கல்வியாண்டிற்குள் 6-8 வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவ - மாணவியரும், கட்டாயம் தமிழில் படிக்க, எழுத தெரிய வேண்டும்.
இந்த இலக்கினை நிறைவேற்றும் பொருட்டு:
a) தமிழ் எழுத்துக்களை உச்சரிக்க தெரியாதவர்கள்
b) தமிழ் எழுத்துக்கள் உச்சரிக்க தெரிந்து, எழுத்துக் கூட்டி தமிழ் வாசிக்க தெரிந்தவர்கள்
c) தமிழ் சரளமாக வாசிக்கத் தெரிந்தவர்கள் என மூன்று வகையாக,
*சரியாக , பெயர்ப்பட்டியல்,*
பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும்,வரும் திங்கள் கிழமை அன்றே தயார் செய்திட வேண்டும்.
பட்டியல்1,2 க்கு ஏற்றவாறு அனைத்து ஆசிரியர்களும் கூட்டுப் பொறுப்புடன்,குறை தீர் நடவடிக்கை மேற்கொண்டு வரும் அக்டோபர் மாதத்திற்குள், முன்னேற்றம் காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்டவாறு 3 வகைப் பட்டியல்களை,
BRT, Supervisor,BEO,DEO,CEO ஆகியோர் ஆய்வு செய்து இறுதி செய்வர். (செவ்வாய் முதல்)
இதைத்தான் நானும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லிக்கொண்டு இருக்கிறேன்....
ReplyDeleteஆனால் அதிகாரிகள் பாடத்திட்டத்தை முடிப்பதற்கும்.....
தேர்ச்சி அறிக்கை தயாரிக்கவும் தான் சொல்லுறாங்க....
அப்பாடா....
இப்போதாவது பள்ளிக்கூடத்தில் களத்தில் உள்ள குறைகளை கண்டறிந்து கொண்டார்களே......
நம்முடைய கல்வித் துறை உயர் அதிகாரிகள்....
இனிமேலாவது இதில் முழுக்க அக்கறை கொள்ளட்டும்.....
அதைவிடுத்து.....
இடையிடையே ஆய்வு என்னும் பெயரில் பள்ளிக்கூடத்தில் வந்து பாடத்திட்டத்தை முடிச்சயா....
பருவத் தேர்வு முடிவு என்ன ஆச்சு...
என்று தொய்வு ஏற்படுத்தாது....
மாணவர்களை வாசிக்கச் செய்ய....
உதவி செய்யலன்னாலும்...
பரவாயில்லை.....
இப்போது எடுத்து இருக்கும் முடிவான... மாணவர்களை வாசித்தல் செய்யும் இம்முடிவினை தடங்கள் செய்யாது இருந்தாலே போதும்
....