TNUSRB - 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2018

TNUSRB - 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்!

தமிழக போலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்ப மனுக்களைஅனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸ் கைரேகை பிரிவில் 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவி காலியாக உள்ளது. அந்த காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கு202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்ப மனுக்களை www.tnusrbonline.org என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப மனுக்களை அனுப்புவதற்கான கடைசி நாள் 28-9-2018 ஆகும். விண்ணப்பமனுக்கள் தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் செயல்படும் உதவி மையத்தை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளாம். இந்த உதவி மையம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

இந்த உதவி மையம் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள இதர காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும், மாவட்டங்களில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் செயல்படும். உதவி மையத்தை 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899, 9789035725 போன்ற தொலைபேசி மற்றும் செல்போன் எண்களில் பேசலாம். மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி