10ம் வகுப்பு தேர்வுக்கு பெயர் பட்டியல்: பிறந்த தேதியை சரிபார்க்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2018

10ம் வகுப்பு தேர்வுக்கு பெயர் பட்டியல்: பிறந்த தேதியை சரிபார்க்க உத்தரவு


மாணவர்களின் பிறந்த தேதியை,பிறப்பு சான்றிதழுடன் ஒப்பிட்டு, சரிபார்த்த பின்னரே, 10ம் வகுப்பு பெயர் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும்' என, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சராசரியாக, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். நடப்பு கல்வியாண்டு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியல், எமிஸ் இணையதளம் வழியே, ஆன்லைன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

இதில், மாணவர்களின் பிறந்த தேதியை, பிறப்பு சான்றிதழுடன் ஒப்பிட்டு, சரிபார்த்த பின்னரே பதிவு செய்ய வேண்டும், தேர்வர்கள், 2019, மார்ச், 1ல், 14 வயது நிறைவு செய்திருக்க வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சான்றிதழ் வழங்கப்பட்ட பின், பிறந்த தேதியில் மாற்றம் கோரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி