நாட்டில் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில், நாட்டில் கல்வியின் தரத்தை உலக அளவில் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை என்றும் மற்ற மாநிலங்களை விட வட கிழக்கு மாநிலங்களின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிசோரம் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் உள்ளன என்றும் மேகாலயா மாநிலத்தில் உள்ள 41 கிராமங்களில் ஒரு பள்ளிகள் கூட கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இல்லாத கிராமங்கள் பட்டியலில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவா மாநிலத்தில் உள்ள கிராம பள்ளிகள் பற்றிய விவரம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி