1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி: தமிழக அரசு அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2018

1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி: தமிழக அரசு அரசாணை வெளியீடு


1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 6 மாத ஒப்பந்த அடிப்படையில் 1474 ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர்  கழகம் நியமித்து கொள்ளலாம் என்று அரசாணை வெய்யிப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்படும் தற்காலிக முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500 தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் கோரிக்கை நிறைவேறும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி