உலக வரலாற்றில் இன்று ( 24.09.2018 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2018

உலக வரலாற்றில் இன்று ( 24.09.2018 )



செப்டம்பர் 24 (September 24) கிரிகோரியன் ஆண்டின் 267 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 268 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 98 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

622 – முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்தார் (ஹிஜ்ரா).
1664 – நெதர்லாந்து நியூ ஆம்ஸ்டர்டாமை இங்கிலாந்துக்குக் கொடுத்தது.
1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது.
1789 – அமெரிக்க உச்சநீதி மன்றம் நிறுவப்பட்டது.
1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
1840 – இலங்கை வங்கி அமைக்கப்பட்டது.
1841 – புருணை சுல்தான் சரவாக் மாநிலத்தை பிரித்தானியாவுக்குக் கொடுத்தான்.
1869 – கறுப்பு வெள்ளி: ஜேய் கூல்ட், ஜேம்ஸ் பிஸ்க் என்ற இரு செல்வந்தர்களின் சூழ்ச்சியை முறியடிக்க அமெரிக்கா பெருமளவு தங்கத்தை விற்பனைக்கு விட்டதில், தங்க விலை சரிந்தது.
1898 – யாழ்ப்பாணம், இணுவிலில் பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனையை அமெரிக்க மிசன் அமைத்தது.
1906 – வயோமிங்கில் உள்ள பேய்க் கோபுரம் அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
1948 – ஹொண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது.
1968 – சுவாசிலாந்து ஐநாவில் இணைந்தது.
1973 – கினி-பிசாவு போர்த்துக்கலிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1979 – உலகின் முதலாவது மின்னஞ்சல் சேவையை கம்பியூசேர்வ் ஆரம்பித்தது.
1990 – சனிக் கோளில் பெரும் வெண் புள்ளி ஒன்று தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டது.

பிறப்புக்கள்

1902 – ருஹொல்லா கொமெய்னி, ஈரானிய அரசியல்வாதி (இ. 1989)
1936 – சிவந்தி ஆதித்தன் தினத்தந்தி உரிமையாளர் (இ. 2013)

இறப்புகள்

2006 – பத்மினி, தென்னிந்திய நடிகை (பி. 1932)
2009 – நாத்திகம் இராமசாமி, இதழாசிரியர், பகுத்தறிவாளர் (பி. 1932)

சிறப்பு நாள்

கினி பிசாவு – விடுதலை நாள் (1973)
ட்றினிடாட் மற்றும் டொபாகோ – குடியரசு நாள் (1976)

1 comment:

  1. பூனா ஒப்பந்தம் பற்றிய செய்தியே இல்லையே இருட்டடிப்பு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி