காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2018

காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!



காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன்,பள்ளிகளில் சிறப்பு வகுப்புநடத்த கூடாதென கடந்த மாதம் உத்தரவிட்டார்.

அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் 'காலையில், பள்ளி துவங்கும் முன்பும், மாலையிலும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதால், மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதாக' குறிப்பிட்டிருந்தார்.அதிக நேரம் பள்ளியில் செலவழிப்பதால், உடல் ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பள்ளி நேரத்தில் மட்டும், வகுப்புகள் இயங்கினால் போதும்என, அறிவுறுத்தினார். இச்சுற்றறிக்கை, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், காலாண்டு தேர்வு விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் நடத்த கூடா தென, சி.இ.ஓ.,க்கள், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கோவை மாவட்டத்தில், அனைத்து வகை பள்ளிகளும், சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையும் மீறிசெயல்படும் பள்ளி நிர்வாகத்தினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.இ.ஓ., அய்யண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'காலாண்டு தேர்வுக்குப் பின், வரும் 3ம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும். விடுமுறை தினங்களில், பள்ளி நிர்வாக பணிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

கல்வித்துறை உத்தரவை மீறி, சீருடையுடனோ, சீருடை அல்லாமலோமாணவர்களை வரவழைப்பது, சிறப்பு வகுப்பு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

17 comments:

  1. Re consider in the order is necessary to make slow Learners to reach the mainstream to get apass inthepublic exam.

    ReplyDelete
    Replies
    1. Only special class can achieve it. Do you think like? Why?

      Delete
  2. Good news to all. Especially students mind will relax and become fresh to learn in the next term.

    ReplyDelete
  3. Good news to all. Especially students mind will relax and become fresh to learn in the next term.

    ReplyDelete
  4. Yar itha follow panra yella private school m nadathituthaan irukkanga chumma news Ku itha venumna perumaiya pesikalam unmaiyila yenna nadakkuthu yella school LA um

    ReplyDelete
  5. All types of special classes are to be cancelled.Govt will do that ?

    ReplyDelete
  6. மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்குது இது போன்ற அறிவிப்புகள் .புத்தக சுமையை அதிகப்படுத்தி பாடம் நடத்த போதுமான காலம் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் தானே .மாணவர்கள் படிக்க தயாராக உள்ளனர் .ஆசிரியர்கள் நடத்த தயாராக உள்ளனர் .அரசு தடுக்கிறது

    ReplyDelete
  7. Then how can we finish the portion for XI Std.

    ReplyDelete
    Replies
    1. Yes.i too agree this.heavy and started late.how is possible to finish it.

      Delete
  8. What ever the govt announcing, any private school follows it?

    ReplyDelete
  9. What ever the govt announcing, any private school follows it?

    ReplyDelete
  10. in that 5days u r going to complete the portion?

    ReplyDelete
  11. இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பு மட்டுமே.... எந்த அறிவிப்பையும் தனியார் பள்ளிகள் செயல்படுத்துவதில்லை....

    ReplyDelete
  12. ana ennatha sonnalaum athala kekama avanga istathu vaipanga ennga school..ithula neenga konjam strit edunga appa tha nanga konjam free yavum irpom

    ReplyDelete
  13. Already timetable also given our school for those holidays

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி