தமிழக அரசு சார்பில் நாளை ஆசிரியர் தினம் கொண்டாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2018

தமிழக அரசு சார்பில் நாளை ஆசிரியர் தினம் கொண்டாட்டம்

ஆசிரியர் தினத்தையொட்டி, நாளை ஒரே விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, நாடு முழுவதும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில், ஆசிரியர் தின விழா, சென்னை கலைவாணர் அரங்கில், நாளை கொண்டாடப்படுகிறது.

தமிழக அரசு சார்பில், 363 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதில் இருவர், மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள். அதேபோல, பள்ளி வளாகத்தை துாய்மையாக பராமரித்த, 40 பள்ளிகளுக்கு, 'துாய்மை பள்ளி' விருது வழங்கப்பட உள்ளது.

தமிழ் வழியில் படித்து, முன்னிலை மதிப்பெண் பெற்ற, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள், 960 பேருக்கு, காமராஜர் விருது வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி