தமிழக பள்ளிகளில், காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு நாளையுடன் நிறைவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2018

தமிழக பள்ளிகளில், காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு நாளையுடன் நிறைவு!


தமிழக பள்ளிகளில், காலாண்டு தேர்வு நாளை முடிகிறது. மீண்டும் அக்., 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.தமிழக அரசின் பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், 1 முதல்,பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து வருகிறது. செப்., 10ல், மாநிலம் முழுவதும், அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் துவங்கின.இதில், பெரும்பாலானபாடங்களுக்கு தேர்வுகள் முடிந்துள்ளன. இன்று, மொஹரம்பண்டிகை என்பதால், அரசு விடுமுறை. நாளை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளையுடன், பிளஸ் 2 வரை, அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிகின்றன.பள்ளிகளுக்கு, 23ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும், அக்., 3ம் தேதி பள்ளிகளில், இரண்டாம் பருவ பாட வகுப்புகள் துவங்கும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

  1. Kvs exam guidance and last date to apply is 23-09-2018. For details 9600640918

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி