ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு, உயிர்பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2018

ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு, உயிர்பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறி?




வேலூர் அடுத்த பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் அருண்பிரஷாந்த் ஆசிரியர் திட்டியதால் கடந்த 3-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாணவணின் பெற்றோர் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரியர்களை தாக்கியதில் 3 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு, உயிர்பாதுகாப்பு வழங்க கோரி வரும் திங்கள் கிழமை துவங்க இருக்கும் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு பணியை புறக்கணிக்க அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் முடிவு. இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி